முன்னுரை



ஜோதிடம் என்பது ஒரு அறிவியல் சார்ந்த ஆன்மிக கலை, இது வானவியலை அடிப்படையாக கொண்டது. வானில் உள்ள எண்ணற்ற நாட்சத்திர கூட்டத்தில் ஒரு குறிப்பிட்ட வளையத்தில்  360 பாகைக்குள் 27 குழுக்காளக  நாட்சத்திரங்கள்  சூரியனை மையமாகக் கொண்டு ஒரு நீண்ட வட்டப்பாதையில் வலம்வருகின்றன. சூரியனுக்கு முன்னும் பின்னும் 6 கிரகங்கள்  இந்த பாதையில் சுற்றிவருகின்றன. நாம் வாழும் இந்த பூமிக்கு மிக அருகிள் உள்ள கிரகம் சந்திரன். அதை அடுத்து புதன், சூக்கிரன் உள்ளது, சுக்கிரனுக்கு அடுத்தபடியாக பூமி சூரியனை சுற்றிவருகிறது, பூமியை அடுத்து செவ்வாய், குரு, சனி,  ஆகிய கிரகங்கள் வளம்வருகின்றன. சூரியனை மையமாகக் கொண்டு இந்த 6 கிரகங்களும்  முதலில் சந்திரன் இரண்டாவது புதன் முன்றவாது சுக்கிரன்  நான்காவது சூரியன் ( பூமி மையப்புள்ளி)  ஐந்தாவது செவ்வாய்  ஆறாவது குரு ஏழாவது சனி ஆகிய கிரகங்கள் தத்தம் கதிர்வீச்சுகள் மூலம் 7 ஓரை சக்திகளாக ஒரு மணிக்கு ஒரு கிரகம் வீதம் மாறிமாறி 24 மணிநேரமும் ஆகிக்கசக்திகாளக  வளம்வருகின்றன. இவை வானவியல் ( Astronomy )  நமக்கு உணர்த்தும் உண்மையாகும்இதுவே அண்டசராசரம் அதாவது சுருக்கமாக அண்டம் அல்லது பிரபஞ்சம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த  அண்டம்  அதாவது பிரபஞ்சத்தில் உள்ள பொருள்கள் (கரு) என்ன என்ற கோள்விக்கு அறிவியல் கூறுவது என்வென்றால் மேற்படி பிரபஞ்சம்
1, நிலம் (பிருத்வி)
2, நீர் (அப்பு)
3, நெருப்பு (தேயு)
4, காற்று ( வாயு)
5, ஆகாயம் (ஆகாஷ்)
ஆகிய ஐந்து பொருட்களால் உருவானது. இவை ஐந்தும் ஐம்பெரும் பூதங்காக பஞ்சபூதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பஞ்சபூதங்களில்  நிலம், (பூமி)  குரு என்ற கிகரத்தையும், நீர், சந்திரன், சுக்கிரனி ஆகிய கிரகங்களையும் நெருப்பு சூரியன், செவ்வாய் ஆகிய கிரகங்களையும் புதன் காற்றையும் சனி ஆகாயத்தையும் உள்ளடக்கி (பூமியின் வடபாக நிழல் ராகு கிரகத்தையும் தென்பாக நிழல் கேது கிகரத்தையும் ) பிரபஞ்சம் உருவானது,

இந்த பிரபஞ்சத்தில் உள்ள பூமியில் நான்கு வகை தோற்றத்தில்
1, வேர்வித்து
2, வியர்வை
3, முட்டை
4, கருப்பை (கரு)
ஆகிய உயிர்யினம்  ஏழு வகை பிறப்புக்களாக
1, தாவரம்
2, நீர்வாழ்வன
3, ஊர்வன
4, பறவைகள்
5, விலங்குகள்
6, மனிதர்கள்
7, தேவர்கள்
மேற்கண்ட நான்கு வகை உயிர்னம் ஏழு வகை பிறபுக்களாக உலகில்  84000 யோனிகள் மூலம் உயிரினங்கள் தோன்றியது. இந்த உயிரினங்கள் பிண்டம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த பிண்டம் எதனால் உருவானது  அதில் உள்ள பொருட்கள் ( கரு ) என்ன என்பதை ஆராய்ந்தால் அதில் உள்ளது  நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், (வெற்றிடம்) ஆகிய ஐந்து பெருள்களே ஆகும், ஆதாவது பிண்டத்தில உள்ள எழும்பு நிலத்தையும், சதை ரத்தம் நீரையும்,  மூச்சு நெருப்பையும், சுவாசம் காற்றையும், வெற்றிடம் ஆகாயத்தையும் குறிக்கின்றன, எனவே அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உள்ளது. என்பதை உணரமுடிகிறது.
இந்த ஏழு வகை பிறப்பில் 6வது பிறப்பு மனிதர்கள் ஆகும். இந்த மனிதர்கள் வாழும் வகையை  அறிந்து கொள்ள ஏழாவது பிறப்பான தேவர்கள் எனப்படும் ரிஷிகள் 4 வேதம் ( ரீக் வேதம், யஜுர் வேதம், சமா வேதம், அதர்வண வேதம்) 6 சாஸ்திரங்களில் உள்ளடக்கி  ஆயகலை என்னும்  64 கலைகளில் ஏழாவது கலையாக ஜோதிட கலை (Astrology) உருவாக்கப்பட்டது, ஆகவே ஜோதிடம் என்பது  அறிவியல் சார்ந்த ஆன்மிக கலை என்பது தெள்ளத்தெளிவாக விளங்குகிறது.

நீ இறைவனை தேடு சகலமும் உன்னை தேடும்


ஜோதிட ஆசான் T.P.முர்த்தி  DA (Astro)
நிறுவனர் சப்தரிஷி ஜோதிடபயிற்சி  கல்வி மையம்,

திருச்செங்கோடு

ஜோதிட பாடம் பயில புத்தகம் வேண்டும் என விரும்புகிறவர்கள் தொடர்புக்கு

Name

Email *

Message *